நாட்டில் தற்போது 03 வகையான காய்ச்சல் அறிகுறிகளை இலகுவாக இனங்காண முடியாத நிலையில் பரவி வருவதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உடல் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, இவ்வாறான காய்ச்சலுக்கான மருந்துகளை பயன்படுத்தும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென விசேட வைத்தியர் உபுல் திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, வலி நிவாரணிகளை பயன்படுத்துவதன் மூலம் எதிர்பாராத அபாயங்கள் ஏற்படக்கூடும் எனவும் நாட்டில் பரவிவரும் இன்புளுவன்சா நிலைமை தொடர்பிலும் இங்கு விளக்கமளிக்கப்பட்டதோடு டெங்கு நோய் தற்போது நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதக்கவும் உடல் நோய்கள் தொடர்பான நிபுணரான வைத்தியர் உபுல் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்போது டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,033 ஆக உள்ளதாகவும் கடந்த இரண்டு வாரங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக சுகாதாரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.