பிறப்புச் சான்றிதழ் டிஜிட்டல் தொழிநுட்பத்தின் ஊடாக உடனடியாக வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
இதன்படி, தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து இந்த டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் தொடங்கப்பட உள்ளதாகவும், திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், புத்தளம் மாவட்டத்தின் பிரதேச செயலகப் பிரிவின் பிறப்பு, இறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்கள் இல்லாதவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நடமாடும் சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த இதனைத் தெரிவித்துள்ளார்.