மினுவாங்கொடை, கலோலுவ பிரதேசத்தில் வீடொன்றின் பொருட்களை கொள்ளையிட்ட 03 சந்தேக நபர்களை மினுவாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்படி, நேற்று காலை குறித்த வீட்டில் உள்ளவர்களை பயமுறுத்தி கைகளை கட்டி வைத்து விட்டு வீட்டில் இருந்த தங்க பொருட்கள் உட்பட 16 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான சொத்துக்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்து குறித்த கைது நடைபெற்றுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து 01 தங்க நெக்லஸ், 02 தங்கப் பதக்கங்கள், 02 மடிகணினிகள், 01 iPad, 03 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சில பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஜா அல, சீதுவ மற்றும் கடவத்தை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இன்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.