
இடைநிறுத்தப்பட்ட இலகுரக ரயில் திட்டத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்திற்கு முன்னதாக இந்த அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்பயம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஜப்பானின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட இலகு ரயில் திட்டத்தை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இதனால் ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்தின் போது இலங்கை தொடர்பில் ஜப்பான் கொண்டிருந்த கவலைகளை சரி செய்ய முடிந்ததாக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும், தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகளை கருத்திற்கொண்டு, இந்த நாட்டில் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையை நிறுவுவதற்கான முன்மொழிவுக்கும் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவும் கருத்து வெளியிட்டார்.