அமெரிக்கா டொலரின் விலை வீழ்ச்சியுடன் ஒப்பிடும் போது மருந்துகளின் விலையை மிக விரைவாக குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில், டொலரின் விலை குறைவதை ஒப்பிடும் போது மருந்துப் பொருட்களின் விலை குறைந்தது 15 வீதத்தால் குறைக்கப்பட வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடுகையில் மருந்தின் விலை 190 ரூபா முதல் 370 ரூபா வரையில் பெருமளவு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளதோடு சுகாதார அமைச்சு, தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையகம், அரச மருந்து ஒழுங்குமுறைக் கூட்டுத்தாபனம் மற்றும் மருத்துவ விநியோகப் பிரிவின் உயர் அதிகாரிகள் கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே சுகாதார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.