ஜூன் 15ஆம் திகதி முதல் 50 கிலோ யூரியா உர மூட்டை ஒன்றின் விலையை 9000 ரூபாவாக குறைக்க அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர நிறுவனங்களும் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இன்று (31) காலை யூரியா உரத்தின் விலையை குறைப்பது தொடர்பான கலந்துரையாடலின் போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
31,500 மெற்றிக் தொன் யூரியா உரம் கொண்ட உரக் கப்பல் ஒன்று ஜூன் 10-12 ஆம் திகதிகளில் இலங்கைக்கு வரவுள்ளது.
இதன்படி, டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் உலக சந்தையில் யூரியா உரத்தின் விலை குறைவடைந்துள்ளமை போன்றவற்றின் அனுகூலத்தை விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளதுடன் கடந்த பருவத்தில் தனியாரால் 42,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட யூரியா உர மூட்டை தற்போது தனியாரால் 11,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் உற்பத்திச் செலவைக் குறைக்கும் நோக்கிலேயே அரசாங்கம் இந்தச் சலுகைகள் அனைத்தையும் வழங்கி வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் வலியுறுத்தினார்.