தேவையற்ற ஆட்கள் மற்றும் இடங்களைப் பாதுகாக்க நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை நீக்கி உடனடியாக பொலிஸ் நிலையங்களுடன் இணைக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.
தற்போது, மக்கள் மற்றும் இடங்களின் பாதுகாப்பிற்காக சுமார் 5400 பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், மக்கள் மற்றும் இடங்களுக்கு பாதுகாப்பு தேவையா என்பதை உரிய முறையில் ஆராய்ந்து மதிப்பீடு செய்யுமாறு அமைச்சர் திரன் அலஸ் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. .
நேற்றிரவு பாராளுமன்றத்தில் நடைபெற்ற பொது பாதுகாப்பு ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.