அம்மை நோயினால் பாதிக்கப்பட்ட 14 சிறுவர்கள் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், நாட்டில் பல பிரதேசங்களில் சிறுவர்கள் அம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இருந்தபோதிலும் உரிய நேரத்தில் குழந்தைகளுக்கு அம்மை தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்குமாறும் பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.