வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் உயிரிழந்ததாகக் கூறப்படும் ஆர். ராஜகுமாரி என்ற பணிப்பெண்ணின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணையின் தீர்ப்பை ஆகஸ்ட் 25ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, குறித்த மரணம் தொடர்பான சாட்சியங்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதுடன் உயிரிழந்த பெண் இறுதியாக பணியாற்றியதாக கூறப்படும் பொரளை, கோட்டை வீதியிலுள்ள வீட்டில் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிய .அஜித் விஜேசேனவிடம் இன்று சாட்சியமும் பெறப்பட்டது.
இதேவேளை, வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த பெண்ணை தாக்குவதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் இறப்பர் குழாய் ஒன்றை குற்றப்புலனாய்வு திணைக்களம் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதுடன், அதனை அரசாங்க பரிசோதகரிடம் அனுப்பி வைக்குமாறு குறித்த திணைக்கள அதிகாரிகள் கோரிக்கை விடுத்தத்தினைத் தொடர்ந்து குறித்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கூடுதல் மாஜிஸ்திரேட், சம்பந்தப்பட்ட ரப்பர் குழாயை அரசு இரசாயனையாளருக்கு அனுப்பி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.