கடுகஸ்தோட்டை புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரியின் இடைநிலை தர மாணவர் சேர்க்கைக்கு போலி ஆவணங்களை தயாரித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் அதிபர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் அவரை கைது செய்வதற்காக பொலிஸார் முன்னாள் அதிபர் வசித்ததாக கூறப்படும் இடத்திற்கு சென்ற போதிலும் அவர் அங்கு இருக்கவில்லை என தெரிவிக்கப்படுவதோடு குறித்த சம்பவத்தின் பின்னர், முன்னாள் அதிபர் மாகாண கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
ஆனால் ஒரே ஒரு நாள் மட்டும் அங்கு வேலைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, முன்னாள் அதிபரும் கம்பளை வைத்தியசாலையில் வைத்திய அறிக்கையை பெற்றுக்கொண்ட போதிலும் அது போலியானது என தெரியவந்துள்ளதுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாக உரிய மருத்துவ அறிக்கை கிடைக்கப்பெற்ற போதிலும் அவர் வைத்தியசாலையில் இல்லை எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரியின் இடைநிலை தர மாணவர் சேர்க்கைக்கு போலி ஆவணங்களை தயாரித்ததாக கூறப்படும் மோசடி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கிராம அதிகாரி ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
சந்தேகத்திற்கிடமான கிராம உத்தியோகத்தர் கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரிக்கு மாணவர்களை அனுமதிப்பதற்காக வசிப்பிட சான்றிதழ்களை வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், குறிப்பிட்ட முகவரிகளின் கீழ் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு வதிவிட சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளதுடன் கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரியின் இடைநிலை தர மாணவர்களை அனுமதிப்பதற்கான ஆவணங்களை தயாரிக்கும் இந்த மோசடி தொடர்பான உண்மைகளையும் வெளிப்படுத்தியிருந்த நிலையில் குறித்த குற்ற செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரியின் முன்னாள் அதிபர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார் என்பதுவும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.