கெக்கிராவ மாவட்ட நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள காணி வழக்கு தொடர்பில் ஆவண காப்பகத்தில் இருந்த ஆவணத்தின் இரண்டு பிரதிகளை கிழித்து அழித்ததாக கூறப்படும் பெண் சட்டத்தரணி ஒருவரை கெக்கிராவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்படி, கெக்கிராவ மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், நீதிமன்ற நடவடிக்கைகளின் போது, நீதிமன்றப் பதிவேட்டில் காணி வழக்கு தொடர்பான இரண்டு ஆவணங்களைக் கிழித்து, குறித்த இடத்திலேயே அழித்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்ததோடு இச்சம்பவம் தொடர்பில் அப்போது பதிவகத்தில் கடமையாற்றிய நீதிமன்ற ஊழியர் உத்தியோகத்தர்கள் நீதிமன்ற பதிவாளருக்கு அறிவித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பின்னர், குறித்த வழக்குப் பொருட்களுடன் சந்தேகத்தின் பேரில் சட்டத்தரணி கைது செய்யப்பட்டு கெக்கிராவ மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.