மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளனர்.
இதன்படி, ஜனாதிபதி அலுவலகத்தில். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இதுவரை 11,000 பொது மக்கள் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஊழியர் பற்றாக்குறை பிரச்சினையாக இருப்பதாகவும் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், இதற்கான விரைவான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு தேவையான வழிகாட்டுதல்களை விரைவில் தயாரித்து வழங்குமாறும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்ததாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளதோடு இதன் மூலம் கமிஷனுக்கு வரும் புகார்களின் எண்ணிக்கை குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுவதக்கவும் தெரிவிக்கப்படுகின்றது.