இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எந்தவொரு ஊடக நிறுவனத்திற்கும் தணிக்கை விதிக்கவில்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஊடக நிறுவனங்கள் அல்லது ஊடகவியலாளர்களுக்கு இலங்கை கிரிக்கெட் தடை விதித்ததாக எழுந்த குற்றச்சாட்டை நிராகரிப்பதாக இலங்கை ஒலிபரப்பாளர்கள் மன்றத்தின் தலைவர் அசங்க ஜயசூரியவும் அதன் செயலாளர் மொஹான் டி சில்வா கையொப்பமிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, ஏபிசி ஊடக வலையமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ ஊடக அனுமதியை நீடிக்காது மாத்திரம் கடந்த ஜூன் 23ஆம் திகதி இடம்பெற்ற முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த அமைப்புக்கு விதிக்கப்பட்டுள்ள தணிக்கை தொடர்பில் இலங்கை ஒலிபரப்பாளர்கள் மன்றம் இலங்கை கிரிக்கெட் சபைக்கு அனுப்பியுள்ள கடிதத்திற்கு பதிலளிக்கும் போதே இலங்கை கிரிக்கெட் சபை இதனை தெரிவித்துள்ளது.
இலங்கை ஒலிபரப்பாளர்கள் மன்றம் அனுப்பியுள்ள கடிதத்தை கருத்திற்கொண்டு இவ்வருட எல்பிஎல் போட்டிகளை ஊடகங்களில் ஒளிபரப்புவதற்கு உரிய ஊடக நிறுவனத்திற்கு அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.