குறிப்பிட்ட பயிற்சி இல்லாத ஆசிரியர்களுக்கு எதிர்காலத்தில் முன்பள்ளிகளை ஆரம்பிக்க இடமளிக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஆரம்பக் கல்வியின் அடித்தளமான முன்பள்ளிக் கல்வியில் விசேட கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது எனவும் நாடு முழுவதும் பல்வேறு வகைகளின் கீழ் இயங்கும் முன்பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 19,000 ஆகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், அவர்களில் முன்பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கை சுமார் 40,000 என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.