மத்திய சோமாலியாவில் கார் வெடிகுண்டு தாக்குதலில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, ஹிரான் பிராந்தியத்தின் புலோபேர்ட் மாவட்டத்தில் உள்ள பரபரப்பான சந்தைக்கு அருகே வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் வெடித்ததுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, அல்-ஷபாப் என்ற தீவிரவாத அமைப்பு பொதுமக்கள் மற்றும் இராணுவ வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாகவும் சோமாலிய ஜனாதிபதி ஹசன் ஷேக் மொஹமட், அல்-ஷபாபுக்கு எதிரான இரண்டாம் கட்ட தாக்குதல்களை அண்மையில் ஆரம்பித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
மேலும், உள்ளூர் பழங்குடி போராளிகள், ஆப்பிரிக்க யூனியன் துருப்புக்கள் மற்றும் அமெரிக்க வான் ஆதரவுடன் ஆயுதம் ஏந்திய நாட்டின் இராணுவம் பல நகரங்களையும் கிராமங்களையும் கைப்பற்றியுள்ளன.