
தரமற்ற இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் பணிப்பாளர் உட்பட நான்கு உயர் அதிகாரிகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது.
இதன்படி, சம்பவம் தொடர்பில் மருத்துவ வழங்கல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில விக்கிரமநாயக்க, உதவிப் பணிப்பாளர் தேவசாந்த சொலமன், கணக்காளர் (விநியோகம்) நேரன் தனஞ்சய மற்றும் மருத்துவ விநியோகப் பிரிவின் பங்குக் கட்டுப்பாட்டாளர் சுஜித் குமார ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.