2023ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மீள் பரிசீலனை செய்ய இணையத்தினூடாக (online) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, மேன்முறையீடுகளுக்காக 2023.11.07 ஆம் திகதி முதல் 2023.12.04 ஆம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன் சம்பந்தப்பட்ட பரீட்சார்த்தி, பாடசாலை அதிபரினால் வழங்கப்பட்டுள்ள பயனர்பெயர் (Username) மற்றும் கடவுச்சொல்லைப் (Password) பயன்படுத்தி https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்தில் School Login உள்நுழைந்து மேன்முறையீட்டு கோரிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்.