மொத்தம் 13,588 மாணவர்கள் 2022(2023) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9 பாடங்களிலும் ‘ஏ’ சித்தியடைந்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கண்டியில் உள்ள மஹாமாயா பெண்கள் பாடசாலை மாணவியொருவர் அனைத்திலும் முதலிடம் பெற்று, பரீட்சையில் நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மற்றும் கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த இரு மாணவிகள் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளனர்.
முடிவுகளின் அடிப்படையில், 72.02% மாணவர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சை.எழுத தகுதி பெற்றுள்ளனர்.
மேலும், பரீட்சை பெறுபேறுகளை நேற்று (30) இரவு பரீட்சைகள் திணைக்களம் தனது உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk/ www.results.exams.gov.lk இல் வெளியிட்டுள்ளதுடன் மறு ஆய்வுக்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 14 முதல் 18 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
இந்த ஆண்டு மே 29 முதல் ஜூன் 08 வரை நாடளாவிய ரீதியில் 3,568 மையங்களில் பரீட்சை நடைபெற்றதுடன் மொத்தம் 472,553 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.