நிர்மாணத் துறையில் தொழில் வாய்ப்புகளுக்காக விசேட திறன்மிக்க தொழிலாளர் வீசா பிரிவின் கீழ் இலங்கை இளைஞர்கள் ஜப்பானுக்குள் நிபந்தனையுடன் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் இன்று டிசம்பர் (01) திகதி அமுலுக்கு வருவதாகவும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இலங்கை இளைஞர்கள், விசேட திறன்மிக்க தொழிலாளர் வீசா வகையின் கீழ் ஜப்பானில் நுழைவதற்குத் தகுதி பெறுவதற்கு, தேர்ச்சிப் பரீட்சையில் சித்தியடைந்து ஜப்பானிய மொழித் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.