அரச வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் முன்னர் வரியில் இருந்து விடுவிக்கப்பட்ட 138 பொருட்களில் 97 பொருட்களுக்கு பெறுமதி சேர் வரி விதிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இன்று (10) பாராளுமன்றத்தில் பெறுமதி சேர் வரி திருத்தங்கள் மீதான விவாதத்தை ஆரம்பித்த நிலையில் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, நிலையான தொலைபேசி நெட்வொர்க்குகளில் உள்ள குறுஞ்செய்தி சேவைக்கு (SMS) பெறுமதி சேர் வரிக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் மருந்துகள், உபகரணங்கள், அரிசி மாவு, கோதுமை மா, மரக்கறிகள், பழங்கள், திரவ பால் மற்றும் ‘சுவசெரிய’ அம்புலன்ஸ் சேவைக்கு பெறுமதி சேர் வரி விதிக்கப்படாது என இராஜாங்க அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
மேலும் கருத்துத் தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, வரிக் கொள்கைகளை திருத்தியதன் பின்னர் அரசாங்கம் தனது வருமானத்தில் அதிகரிப்பை அவதானித்துள்ளதாகவும் வருவாயை அதிகரிப்பதன் மூலம், தற்போதைய 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து குறைந்தபட்சம் 5-6 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதன் இருப்புக்களை அதிகரிக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாகவும் . இவ்வாறு அதிகரிக்கும்போது இலங்கையின் ரூபாய் உயர்வடையும் மற்றும் பொருட்களின் விலைகள் நிரந்தரமாக குறையும். எனவும் சுட்டிக்காட்டினர்.
பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான பாராளுமன்ற விவாதம் இன்று (10) காலை ஆரம்பமான நிலையில் ஜனவரி 01, 2024 முதல் பெறுமதி சேர் வரியை 15% இலிருந்து 18% ஆக அதிகரிக்க அக்டோபர் மாதம் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதன்படி, சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்புக் கொள்ளப்பட்ட வரி வருவாய் மற்றும் முதன்மை இருப்பு இலக்குகளை அடைய உதவும் வகையில், சில புதிய வரி முன்மொழிவுகள் ஜனவரி 01, 2024 முதல் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட வரி வசூல் இலக்குகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பதை அவதானித்த பின்னரே அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.
இதன்படி, முன்னதாக, கடன் நிலைத்தன்மையை உறுதி செய்ய நிதி ஸ்திரத்தன்மைக்காக பல்வேறு வரி அடிப்படையிலான அதிகரிப்புகள் மற்றும் வளர்ச்சி வரிக் கொள்கை முன்மொழிவுகள் செயல்படுத்தப்பட்ட பின்னர், 2023 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் வரி வருவாய் 2022 ஆம் ஆண்டின் தொடர்புடைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 51% அதிகரித்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், குறித்த பெறுமதி சேர் வரி18% ஆக அதிகரிப்பத்தானது வடிக்கையாலார்களது நுகர்வு மேலும் குறைவதற்கு வழிவகுக்கும் என இலங்கை வர்த்தக சம்மேளனம் கவலை வெளியிட்டுள்ளது.