நிவாரணத்திற்காக மீண்டும் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு அடுத்த மாதம் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
குறித்த வேலைத்திட்டத்தை மேலும் விரிவானதாகவும் துல்லியமானதாகவும் மாற்றும் நோக்கில் இந்த வாய்ப்பு வழங்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதனால், கடந்த காலத்தில் ஏற்பட்ட குறைபாடுகளை இனங்கண்டு, வேலைத்திட்டத்தை இன்னும் துல்லியமாக முன்னெடுத்துச் செல்ல முடியும் எனவும் அஸ்வசும வேலைத்திட்டத்தை மேலும் வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக இந்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் 205 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், ஜனவரி மாதத்தில் இந்த வேலைத்திட்டத்தின் மூலம் அதிகளவான மக்கள் பயனடைய முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.