நாட்டில் போதைப்பொருள் விநியோகம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்கும் முயற்சியில் கடந்த வார இறுதியில் தொடங்கப்பட்ட ‘யுக்தியா’ நடவடிக்கை எதிர்வரும் விடுமுறை நாட்களைக் கருத்தில் கொண்டு சுருக்கமாக நிறுத்தப்படும்.
இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ, எதிர்வரும் 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
கிறிஸ்மஸ் தினம் (25) மற்றும் போயா தினத்தில் (26) பொலிஸ் அதிகாரிகள் வேறு குறிப்பிட்ட கடமைகளுக்கு ஈடுபடுத்தப்பட வேண்டியிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மேலும் விளக்கினார்.
மேலும், விசேட நடவடிக்கை நிறுத்தப்படுவதை இது அர்த்தப்படுத்துவதில்லை என்பதை தெளிவுபடுத்திய பொலிஸ் ஊடகப் பேச்சாளர், விடுமுறையின் பின்னர் அது மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.