ஜப்பான் கடற்கரை அருகே இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
குறித்த நிலநடுக்கங்களின் வலிமை ரிக்டர் அளவுகோலில் 6.5 அலகுகளாகவும் 5 அலகுகளாகவும் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:45 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், 22 நிமிடங்களுக்குப் பிறகு இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
எனினும் நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் மே 55 அன்று, ரிக்டர் அளவுகோலில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஜப்பானின் இஷிகாவாவைத் தாக்கியதில் பலர் காயமடைந்ததுடன் பல கட்டிடங்கள் சேதமாகி இருந்தது.