சட்டத்தின் ஆட்சியை பாதுகாப்பதற்காக தயாரிக்கப்பட்ட 08 புதிய சட்டமூலங்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்காலத்தில் மேலும் பல சட்டங்கள் திருத்தப்படும் எனவும் அறிக்கைகள் தாமதமாவதை தடுக்கும் வகையில் எதிர்காலத்தில் புதிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சு கவனம் செலுத்தி வருவதாகவும் நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.