நிலவும் சீரற்ற காலநிலையையும் மீறி, 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் அந்தந்தப் பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் உறுதியளித்துள்ளது.
இன்று (02) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் (ஓய்வு பெற்ற) மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, முப்படைகள், பொலிஸ் மற்றும் பிற நிறுவனங்களுடன் இணைந்து மாணவர்களை வருகையினை உறுதி செய்வதற்கான முயற்சிகளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேற்கொண்டு வருவதாக விளக்கினார்.
2023 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஜனவரி 04 முதல் 31 வரை நாடளாவிய ரீதியில் 2,298 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.