தம்புள்ளை பிரதேச செயலகத்தில் இன்று (19) இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான T20 போட்டிக்கான டிக்கெட்டுகளை கொள்வனவு செய்யும் முயற்சியில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதன்படி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 போட்டிகளுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக இலங்கை கிரிக்கெட் ஞாயிற்றுக்கிழமை (18) அறிவித்தது.
ஆனால், தம்புள்ளை பிரதேச செயலகத்தில் இன்று காலை 200 டிக்கட்டுகள் வழங்கப்பட்டதையடுத்து சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு பெருமளவான ரசிகர்கள் கூடியிருந்தனர்.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி இன்று இரவு 07:00 மணிக்கு ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.