உலக கிரிக்கெட்டில் இலங்கையை முன்னணியில் வைப்பதே தமது இலக்கு எனவும், அதற்காக அரசாங்கத்தினால் இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (28) நடைபெற்ற சிங்கள விளையாட்டுக் கழகத்தின் 125வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அரசியலையும் விளையாட்டையும் தனித்தனியாக வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, விளையாட்டுக் கழகங்களில் அரசியல்வாதிகள் உயர் பதவிகளை வழங்குவதைத் தடுக்க முடியுமானால் அது நல்லதொரு சூழ்நிலையாக அமையும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
அத்தோடு, சிங்கள விளையாட்டுக் கழகத்தின் 125 வருட வரலாற்றை பதிவு செய்யும் தனித்துவமான புத்தகம் ஒன்றும் இங்கு வெளியிடப்பட்டதுடன், அதனுடன் தபால்தலை மற்றும் முதல் நாள் அட்டையும் வெளியிடப்பட்டது.