சுங்க தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொழில்சார் நடவடிக்கைகளினால் பெருமளவிலான கொள்கலன்கள் துறைமுக பரிசோதனை முற்றத்தில் தடைப்பட்டுள்ளதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுவரை 600க்கும் மேற்பட்ட துறைமுக கொள்கலன்கள் சிக்கியுள்ளதாக அதன் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டாலும் சில அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்தும் இயங்கி வருவதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை, சுங்கப் பணிப்பாளர் நாயகத்தின் கீழ் உள்ள கணக்கை நிதி அமைச்சுக்கு ஒதுக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல சுங்கத் தொழிற்சங்கங்கள் மேலதிக நேர சேவையிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்தன.