பெப்ரவரி 13 ஆம் திகதி கொழும்பு 15 மோதர வீதியில் இடம்பெற்ற கொலை முயற்சி சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பேலியகொட விக்டோரியா பாலம் பகுதியில் வைத்து சந்தேகநபர் நேற்று (16) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து 11 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 35 வயதுடைய பரகந்தெனிய இம்புக்கொட பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
இந்த சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் கொழும்பு வடக்கு குற்றப்பிரிவின் குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர் ஒருவரும், மூன்று சந்தேகநபர்கள் மோதர பொலிஸாராலும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சந்தேகநபர்கள் குற்றச்செயலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் செல்ல பயன்படுத்திய முச்சக்கர வண்டியையும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், மோதர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு 15, மோதர வீதி பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் முகாமையாளர் பெப்ரவரி 13 ஆம் திகதி உணவகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் துப்பாக்கிதாரி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.