காலி யக்கலமுல்ல பொல்வத்தை ஆற்றில் குளித்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் இவ்வாறு உயிரிழந்த சிறுவர்கள் 11 மற்றும் 14 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் ஆற்றில் குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து சிறுவர்கள் உடனடியாக இமதுவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யக்கலமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.