விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை எதிர்வரும் திங்கட்கிழமை கூடி பரிசீலிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிசங்கவினால் இந்த மனுவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதுடன் இந்த மனு தொடர்பான ஆவணங்கள் தமக்கு கிடைக்கவில்லை என சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம நீதிமன்றில் அறிவித்தார்.
இது தொடர்பான ஆவணங்களை சட்டமா அதிபரிடம் ஒப்படைக்குமாறு மனுதாரர்களுக்கு அறிவித்த நீதிபதி, பின்னர் மனுவை பரிசீலிக்க எதிர்வரும் திங்கட்கிழமை அழைக்குமாறு உத்தரவிட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.