ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுபவர்கள் ஒரு மாதத்திற்குள் அந்த நடவடிக்கைகளில் இருந்து நீக்கப்படுவார்கள் என பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதன்படி, பொலிஸ், இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் மட்டுமே துப்பாக்கிகளை பயன்படுத்த முடியும் எனவும், பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பாதாள உலக செயற்பாடுகளுக்கு விசேட அதிரடிப்படை தக்க பதிலடி கொடுக்கும் எனவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர யுக்திய நடவடிக்கையின் கீழ் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகள் குறித்தும் கருத்து வெளியிட்டார்.
மேலும், 24 மணித்தியாலங்களுக்குள் விசேட அதிரடிப்படையினர் திட்டமிட்டு குற்றவாளிகளை தேடும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும், அதற்காக விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.