ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் வார இறுதியில் நடைபெறவுள்ள முக்கிய கூட்டத்திற்கு கொழும்புக்கு அழைத்துள்ளார்.
இதன்படி, சில முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்காக கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் கட்சியின் அனைத்து அமைப்புகளின் பொறுப்பாளர்களும் கட்சி தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், இந்த கூட்டத்திற்கு சம்பந்தப்பட்ட அனைத்து உறுப்பினர்களின் வருகையும் கட்டாயமாக கருதப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் புதிய கூட்டணியொன்று உருவாக்கப்படவுள்ளதுடன், இந்த நடவடிக்கை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பின்னணியில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தலைமையில் புதிய கூட்டணி ஒன்று ஏப்ரல் மாதத்திற்குள் உருவாக்கப்படவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.