ஈஸ்டர் ஞாயிறு அன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் புலனாய்வுத் பிரிவிற்கு தகவல் கிடைத்தும் பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்வில்லையென அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டுமென சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்த நிலையில்.தாக்கல் செய்த ரிட் மனுவை எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி அழைக்கவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, குறித்த மனு சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, இந்த விடயம் தொடர்பில் மேலும் இரண்டு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றில் குறிப்பிட்டதோடு மேல்முறையீட்டு நீதிமன்றம். பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இந்த மனுவை ஆராய்ந்து சமர்பிப்பதற்கான திகதியை வழங்குமாறும் நீதிமன்றத்திடம் கோரினார்.
எனவே, மனுவை எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த மனு தொடர்பான ஆட்சேபனைகள் இருந்தால் மே 03ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிட்டனர்.