மனித உரிமை மீறல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகள் இன்று (27) காலை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்படி, விளக்கமறியலில் உள்ள தனது தந்தையின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதால், உடனடியாக விசாரணை நடத்தி நீதி வழங்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தனது தந்தையை குற்றப்புலனாய்வு திணைக்களம் தன்னிச்சையாக தடுத்து வைத்துள்ளதாக குறிப்பிட்டார்.