வெள்ளவாய ஹடபனகல பிரதேசத்தில் யானை தந்தங்களை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் யானை தந்தங்களை சிறு துண்டுகளாக வெட்டி தம் வசம் வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்
வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் குழுவினால் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து பழங்கால கத்தி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அப்பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள பிரதான சந்தேகநபர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, இது தொடர்பான சுற்றிவளைப்பில் மேலும் பத்து சந்தேகநபர்கள் பல்வேறு குற்றங்களுக்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.