கல்வி நிர்வாகத் துறையில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் இலங்கையின் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவது எதிர்வரும் மாதத்தில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தில் 2018-2020 கல்வியாண்டில் தேசிய கல்வி விஞ்ஞான டிப்ளோமா பயிற்சியை பூர்த்தி செய்த டிப்ளோமாதாரர்களை 3-1 (ஆ) தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்படி, கல்வி நிர்வாகத்தில் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் மாற்றங்களுடன், தற்போதைய பாடசாலைகளின் வகைப்பாடு மாறும் என்றும், அதற்கேற்ப, 1-5 தரம் உள்ள பாடசாலைகள் தொடக்கப் பாடசாலைககளாகவும், 6-10 வகுப்புகள் உள்ள பாடசாலைகள் இடைநிலைப் பாடசாலைகளாகவும் வகைப்படுத்தப்படும் எனவும்10-13 தரங்களைக் கொண்ட பாடசாலைககள் மேல்நிலைப் பாடசாலைககளாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் இந்த வகைப்பாட்டின் படி, பாடசாலைகளுக்கான அதிபர் நியமனம், ஆசிரியர் இடமாற்றம் உள்ளிட்ட நிர்வாகத் தீர்மானங்களை பாடசாலை அமைப்பில் மேற்கொள்வது இலகுவானது என்றும் கல்வி அமைச்சர் மேலும், தெரிவித்தார்.