இடைநிறுத்தப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதன்படி, அதன் அழைப்பாளர் ரவி குமுதேஷ், செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, சுகாதார சேவையில் உள்ள மூன்று தொழிற்சங்கங்களைத் தவிர மற்ற அனைத்து தொழிற்சங்கங்களும் உரிய வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள ஏகமனதாக முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இப்பிரச்சினைக்கு தீர்வு காண வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்றுடன் (27) முடிவடைந்ததுள்ளதால் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு சம்பந்தப்பட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.