நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளில் 823 சந்தேக நபர்களும் 17 பெண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி நேற்று (27) 840 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 41 பேர் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சந்தேகநபர்கள் 22 பேரில் இருவரின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் மற்றும் 27 சந்தேக நபர்கள் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.