அரசுக்கு சொந்தமான வங்கி நிறுவனங்களின் ஒட்டுமொத்த நிர்வாகம், இடர் மேலாண்மை மற்றும் மேற்பார்வை ஆகியவற்றில் உள்ள பலவீனங்கள் காரணமாக, கடந்த கால பொருளாதார நெருக்கடியின் போது இந்த வங்கிகள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
எனவே, இவ்வாறான சிரமங்கள் மீண்டும் ஏற்படாமல் தடுக்கும் நோக்கில், அந்த வங்கிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல சீர்திருத்தங்கள் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் இலங்கை மத்திய வங்கி உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழுவினால் அடையாளம் காணப்பட்டுள்ளன. .
இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தால் வழங்கப்பட்ட விரிவான நிதி வசதித் திட்டத்தில் உள்ளடங்கிய கட்டமைப்புத் தேவையாக சீர்திருத்தங்கள் மற்றும் தேசிய கொள்கைக்கு ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சர்கள் சபை ஒப்புதல் அளித்துள்ளது.