ஆங்கில ஊடகத்தின் மூலம் பாடங்களைக் கற்பிக்கும் 2500 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பான பிரேரணை ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சரினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஆங்கில வழிக் கல்வி மூலம் பொதுப் பாடங்களை கற்பிப்பதற்கு தற்போது அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை 4441 ஆக இருந்த போதிலும் சுமார் 6500 ஆசிரியர்கள் தேவைப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், தற்போது ஆங்கில வழிக் கல்வி மூலம் பாடங்களைக் கற்பிக்கும் 765 பாடசாலைகளின் எண்ணிக்கையை இவ்வருடம் 1000 பாடசாலைகளாக அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதுடன் ஆங்கில மொழி மூலம் பாடங்களைக் கற்பிக்கும் அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கையை 6500 ஆக அதிகரிக்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.