தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, அரசியலமைப்பின் 34(1)வது சரத்தின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியின் மன்னிப்பை வழங்குவார் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.