இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு இந்த வருடத்திற்கான வாக்காளர் பதிவேடு தயாரிப்பது தொடர்பான நடவடிக்கைகளை இன்று (ஏப்ரல் 09) ஆரம்பித்துள்ளதுடன் குறித்த நடவடிக்கைகள் மே 10 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, வாக்களிக்க தகுதி இருந்தும் வாக்காளர் பதிவேட்டில் பெயர் சேர்க்கப்படாத நபர்கள், தங்களின் பெயர்களை உரிய பட்டியலில் சேர்க்க இது அனுமதிக்கின்றது.
ஆகவே, தகுதியுள்ள நாடளாவிய ரீதியில் உள்ளவாக்காளர்கள் தங்கள் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களில் அல்லது தேர்தல் அலுவலகங்களிலோ வாக்காளர் பதிவேட்டில் தமது பெயரினை இணைத்துக் கொள்வதற்கான சந்தர்ப்பம் தற்போது உள்ளதாக தேர்தல்கள் செயலகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கிடையில், ஜூலை 17, 2024 க்குப் பிறகு எந்த திகதியிலும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை அழைக்க தேர்தல் ஆணையக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் இறுதியில் அல்லது ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.