குடிவரவு திணைக்களத்தின் பிரதான காரியாலயத்தின் உள்ளக வளாகத்தில் பொருத்துவதற்காக கொள்வனவு செய்யப்பட்ட சிசிடிவி கமராக்கள் 06 வருடங்களாக நிறுவப்படாமல் சேமிப்பில் உள்ளதாக பொது கணக்கு குழுவிற்கு தெரியவந்துள்ளது.
இதன்படி, மே 15 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த கமராக்களை பொருத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோபா குழுவின் தலைவரான இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு 0.2 மில்லியன் ரூபா மற்றும் 01.01 மில்லியன் செலவில் கொள்வனவு செய்யப்பட்ட சிசிடிவி கமராக்களில் தேவையான அனைத்து உபகரணங்களும் இல்லை எனவும், அவற்றில் ஒரு பகுதியே கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் குழு முன் தெரியவந்துள்ளது.
இதில் தலையிட்ட அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறான நிறுவனங்களில் சில பணியாளர்கள் கமரா கருவிகளை பொருத்துவதற்கு தயாராக இல்லை என சுட்டிக்காட்டிய குழுவின் தலைவர், உரிய கமரா அமைப்பை பொருத்துவதற்கு பொது பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்படும் எனவும் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.