தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து அறவிடப்படும் பாதுகாப்பு வைப்புத் தொகையை அதிகரிப்பதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானம் நல்லதொரு முடிவாக இருந்தாலும், பாதுகாப்புத் தொகையை அதிகரிப்பது மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என பஃவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதன்படி, பிணை வைப்புத் தொகையை அதிகளவில் அதிகரிப்பதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழக்க நேரிடும் என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இந்த திருத்தத்தை நிறைவேற்றுவது தொடர்பில் நிச்சயமற்ற நிலை காணப்படுவதாக பஃவ்ரல் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.