கொலைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த T-56 ரக தானியங்கி துப்பாக்கி, 14 தோட்டாக்கள் கொண்ட மகசீன், வாள் போன்ற கூரிய ஆயுதங்களுடன் மூவரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதன்படி, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மருதானை லொகெட்லேன் பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதேகுறித்த கைது இடம்பெற்றுள்ளது.
அந்த பகுதியில் உள்ள போதிராஜாராமய விகாரைக்கு பின்புறம் உள்ள வீட்டின் மேற்கூரையில் சூட்கேசில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த டி-56 ரக தானியங்கி துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 18, 34 மற்றும் 47 வயதுடைய மருதானை, கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.