பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் நேற்று கிழக்கு மாகாணத்திற்கு பயணித்த போதே தனமல்வில மற்றும் வெல்லவாய பொலிஸ் நிலையங்களை பார்வையிட வந்துள்ளார்.
இதேவேளை, இன்று காலை அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்திற்குச் சென்று அதிகாரிகளின் முகாம்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை வசதிகளை பார்வையிட்டதுடன் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.