பொலிஸாரின் உத்தரவை மீறி கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
வேகமாகச் சென்ற வாகனத்தில் இருந்த ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், பொலிஸ் அதிகாரிகள் நெருங்கியதும் மேலும் இருவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகின்றது.
கனங்கே ரஜமஹா விகாரைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை (11) அதிகாலை 4.30 மணியளவில் இரவு ரோந்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் லொறியில் கால்நடைகளை ஏற்றிச் செல்வதை அவதானித்ததை அடுத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எனினும், வாகனத்தை நிறுத்துமாறு அதிகாரிகள் சைகை காட்டியதையடுத்து, சாரதி வேகமாகச் சென்றுள்ளதுடன் சாரதி உத்தரவுக்கு இணங்கத் தவறியதால், பொலிஸார் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.