நீண்ட தூர ரயில்கள் இன்று வழமை போன்று இயங்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்திருந்த நிலையில் ரயில் இன்ஜின் தடம் புரண்டதன் காரணமாக இன்று காலை முதல் தெற்கு களுத்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் கரையோர புகையிரதத்தின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
இதனால் புகையிரதத்தில் கிராமங்களுக்கு செல்லும் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மருதானை நிலையத்திலிருந்து தெற்கு களுத்துறை நிலையத்திற்குச் சென்ற புகையிரதம் இன்று காலை 5:45 மணியளவில் தடம் புரண்டது.
இதன்படி, ரயிலின் 03 பெட்டிகள் தடம் புரண்டதாகவும்
இதனால் கடலோரப் பாதையில் இயக்கப்படும் ரயில்கள் காலை முதல் தாமதத்துடன் இயக்கப்பட்டதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், தடம் புரண்ட ரயிலை சீர் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், கரையோரப் பாதையில் பயணிக்கும் பயணிகள் புகையிரதத்தில் கொழும்பு கோட்டையிலிருந்து களுத்துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து ஏனைய புகையிரதங்கள் மூலம் அவர்களதுஇடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.