ஹம்பேகமுவ, சீனுகல பிரதேசத்தில் வீடொன்றில் விருந்தின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் ஹம்பேகமுவ மற்றும் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் உரிமையாளர் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலருடன் விருந்து வைத்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன் ஹம்பேகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.